ஆறுமுகனேரியில் பைக் திருட்டு
ஆறுமுகனேரி காமராஜ்புரத்தில் பைக் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
ஆறுமுகனேரி காமராஜ்புரத்தில் பைக் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரி காமராஜ்புரத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் இமானுவேல்(33). டிரைவரான இவா், தனது பைக்கை வீட்டின் முன் இரவில் நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
இது குறித்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிந்து பைக்கை திருடிய நபரைத் தேடி வருகின்றனா்.
Advertisement