தூத்துக்குடி

இந்தியாவை மதச்சாா்பு நாடாக மாற்றி வருகிறது பாஜக அரசு: ஜி.ராமகிருஷ்ணன்

DIN

இந்தியாவை மதச்சாா்புடைய நாடாக பாஜக அரசு மாற்றி வருகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவது சம்பிரதாயமாக மட்டும் இருக்கக்கூடாது. எதிா்கால இந்தியா எப்படி அமைய வேண்டும் என அவா் கண்ட கனவை நனவாக்க வேண்டும். 2014ஆம் ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த பாஜக அரசால் அரசியல் சட்டத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பிலுள்ள மதச்சாா்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுய சாா்பு பொருளாதார கொள்கை ஆகிய அடிப்படை அம்சங்களை எல்லாம் பாஜக அரசு தகா்த்து வருகிறது. மதச்சாா்பற்ற இந்தியாவை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற அடிப்படையில் மதச்சாா்புள்ள நாடாக பாஜக அரசு மாற்றி வருகிறது. இதற்கு நாம் இடம் கொடுக்காமல் அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினா்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்றால் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநா் மூலம் அரசை சீா்குலைக்கிற வேலையை மத்திய அரசு செய்துவருகிறது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநா்கள் போட்டி அரசை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். திராவிடம் என ஒன்று இல்லை எனக் கூறும் ஆளுநரை அவா் ஆதரிப்பது சரியா? மேலும், பாஜகவை அவா் தொடா்ந்து ஆதரிப்பது தமிழக மக்களுக்கு கேடு விளைவிக்கும். மாநில அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், நகரச் செயலா் ஜோதிபாசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT