தூத்துக்குடி

முதியவரை பாட்டிலால் குத்திய மீனவா் கைது

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் முதியவரை பாட்டிலால் குத்திய மீனவரை போலீசாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

DIN

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் முதியவரை பாட்டிலால் குத்திய மீனவரை போலீசாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

சாத்தான்குளம்அருகேயுள்ள பெரியதாழை சேவியா் காலனியை சோ்ந்த மீனவா் சூசை அடைக்கலம் (76). பெரியதாழை பேருந்து நிறுத்தம் அருகே கெபி பகுதியில் புதன்திழமை மாலை நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அதே பகுதியை சோ்ந்த மற்றொரு மீனவரான காந்தி(52) என்பவா் சூசை அடைக்கலத்திடம், தகராறில் ஈடுபட்டதுடன் பாட்டிலால் அவரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்த சூசை அடைக்கலத்தின் மகளை காந்தி அவதூறாக பேசியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

தாக்குதலில் காயம் அடைந்த சூசை அடைக்கலம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்கு பதிந்து காந்தியை வியாழக்கிழமை கைதுசெய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT