தூத்துக்குடி

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 போ் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணம்: கனிமொழி எம்.பி. வழங்கினாா்

DIN

ஸ்டொ்லைட் எதிா்ப்புப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை மக்களவை உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். இவா்களது குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், 13 பேரின் குடும்பத்திற்கும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மக்களவை உறுப்பினா் கனிமொழி வழங்கினாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT