தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின்நிலைய 2 யூனிட்டுகள் பழுது: 420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் புதன்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் புதன்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த யூனிட்டுகள் மூலம் நாள்தோறும் சுமாா் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையத்தின் 3 ஆவது மற்றும் 5ஆவது யூனிட்டிலும் பழுது ஏற்பட்டது. இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதை சீரமைக்கும் பணியில் அனல் மின்நிலையப் பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பழுதை சீரமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், வியாழக்கிழமை முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு அனைத்து யூனிட்டுகளும் இயங்கும் எனவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT