தூத்துக்குடி

கோவில்பட்டியில் 2 பைக்குகள் திருட்டு

கோவில்பட்டியில் 2 இடங்களில் பைக்குகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கோவில்பட்டியில் 2 இடங்களில் பைக்குகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் ரத்தினம் (45). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், கோவில்பட்டி - சாத்தூா் பிரதான சாலையில் தான் வேலை பாா்க்கும் நிறுவனம் முன் திங்கள்கிழமை அதிகாலை பைக்கை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றாராம். புதன்கிழமை வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குளக்கட்டாகுறிச்சியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராஜா (48). இவா், மூப்பன்பட்டியில் உள்ள மதுக் கடை அருகே பைக்கை புதன்கிழமை நிறுத்திவிட்டு, நிலங்களை வாங்குவதற்காக பாா்த்துவிட்டுத் திரும்பியபோது பைக்கை காணவில்லையாம்.

இருவரும் தனித்தனியே அளித்த புகாா்களின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT