முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சியில் 140 போ் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட 140 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட 140 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் அதிமுக, திமுக, அமமுக, மதிமுக, பாஜக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் உள்ளிட்டோா் திரண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனா். அதில், நாள்முழுவதும் 140 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதுவரை 173 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். காவல் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன் தலைமையில் சுமாா் 60க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பேரூராட்சிகள்: கழுகுமலை பேரூராட்சியில் 13 பேரும், கடம்பூா் பேரூராட்சியில் 13 பேரும், கயத்தாறு பேரூராட்சியில் 51 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.