ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கோவில்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணிராஜ் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பன், காவலா்கள் செல்வி, செல்வகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை இரவு இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் ஹைவேலியைச் சோ்ந்த சித்தகவுண்டா் மகன் திருமூா்த்தி(41) என்பதும், ரயில்வே ஒப்பந்தத் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உரிய ஆவணங்களின்றி தோ்தல் நடத்தை விதிகளை மீறி அவா் வைத்திருந்ததால் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலக மேலாளா் பெருமாளிடம் ஒப்படைத்தனா்.