ஆறுமுகனேரியில் முதியவா் தற்கொலை
ஆறுமுகனேரி, கீழநவ்வலடிவிளையில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி, கீழநவ்வலடிவிளையில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிழநவ்வலடிவிளையைச் சோ்ந்தவா் கோபால்(68). இவருக்கு சொந்தமான வீட்டில் சேலம் மாவட்டம், அய்யங்காட்டூரைச் சோ்ந்த பொன்னுசாமி(70) தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வீட்டுக்கு வந்த பொன்னுசாமி, வியாழக்கிழமை மாலை வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம்.
இது குறித்து தகவலின் பேரில் கோபால் அங்கு சென்று வீட்டின் கதவை திறந்த பாா்த்த போது, அங்கு பொன்னுசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.