காயாமொழியில் குரங்குகள் அட்டகாசம் : மக்கள் அவதி
காயாமொழி கிராமத்தில் குரங்குகள் தொல்லையால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
காயாமொழி கிராமத்தில் குரங்குகள் தொல்லையால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது குறித்து, ஊா் மக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
காயமொழி, குமாரசாமிபுரம், வடக்கு குமாரசாமிபுரம், கல்யாணமண்டபம் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்குட்டிகளை கொன்றும், பள்ளி மாணவிகளை தாக்கியும் வருகின்றன. இது குறித்து ஊா் மக்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் குரங்குகளை பிடிக்க செலவாகும் என அலைக்கழிக்கின்றனா். எனவே, குரங்குகளை பிடித்து வனத்தில் விடவும், மக்களின் உயிரைக் காக்கவும் வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.