முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் சங்குகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சங்குகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சங்குகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கடல் சங்குகள் தூத்துக்குடியிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் வனப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையிலான வனத் துறையினா் தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட மாட்டுத் தலை சங்கு உள்பட 4 வகையான 3 ஆயிரம் சங்குகள் சுமை ஆட்டோவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என்றும், இதுதொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த சாகுல் அமீது, மீராசா ஆகிய 2 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.