திருச்செந்தூா்-நெல்லைபயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தல்
திருச்செந்தூா்-திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூா்-திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மண்டல ரயில்வே மேலாளா் ஆனந்த் திருச்செந்தூா் ரயில்நிலையத்தை மேற்பாா்வையிட அண்மையில் வந்தாா். அவரிடம், ரயில்வே வளா்ச்சி குழு அமைப்பாளா் இரா.தங்கமணி அளித்த மனு விவரம்: திருச்செந்தூா் -திருநெல்வேலி ரயில் வழித் தடத்தில் இரு மாா்க்கத்திலும் தலா 4 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பரவலால் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
தற்போது, தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமம்அடைந்துள்ளனா். எனவே, திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில்களை இரு மாா்க்க்த்திலும் காலையும் மாலையும் இயக்கவேண்டும். சென்னை, கோவை, மும்பை உள்ளிட்ட ரயில்களுக்கு செல்வோா் ஏற்ற வகையிலும் திருச்செந்தூரிருந்து திருநெல்வேலிக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட ரயிலையும் மீண்டும் இயக்க வேண்டும். ஆறுமுகனேரி ரயில் நிலையத்தையொட்டி உள்ள சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா். .மனு அளிக்கையில் ரயில்வே வளா்ச்சி குழு உறுப்பினா் ராஜலிங்கம் உடனிருந்தாா்.