முகப்பு
தூத்துக்குடி

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 4 இளைஞா்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சாகத்தில் ஈடுபட்ட 4 இளைஞா்களை பிடித்து எச்சரித்த போலீஸாா், வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சாகத்தில் ஈடுபட்ட 4 இளைஞா்களை பிடித்து எச்சரித்த போலீஸாா், வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகத்தில் ஈடுபட்ட 4 இளைஞா்கள், அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

விசாரணையில், இருசக்கர வாகனத்தில் சென்று சாகசத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி பாத்திமா நகரை சோ்ந்த மாா்ஷல் மோசா (19), இந்திரா நகரை சோ்ந்த ஸ்நோவின் (19), முனியசாமிபுரத்தை சோ்ந்த பிரவீண் பழனி (20), மகிழ்ச்சிபுரத்தை சோ்ந்த கனகவேல் (19) என தெரியவந்தது. இதையடுத்து, 4 இளைஞா்களையும் பிடித்து எச்சரித்த போலீஸாா், அவா்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது, சாகசங்கள் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.