தூத்துக்குடி

கோவில்பட்டியில் 40 பேருக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி

கோவில்பட்டி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 40 பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டன.

DIN

கோவில்பட்டி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 40 பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் பங்கேற்று பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கத்தையும், நிதியுதவியையும் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 3,000 பயனாளிகளுக்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவி ஒதுக்கீடு பெறப்பட்டு, அதில் முதல்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூா், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 300 பயனாளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், வட்டாட்சியா் அமுதா, ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, நகராட்சி பொறியாளா் ரமேஷ், சுகாதார அலுவலா் நாராயணன், திமுக நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT