தூத்துக்குடியில் முறைசாரா தொழிலாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கோரம்பள்ளத்தில் உள்ள தொழிலாளா் நல அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முறைசாரா தொழிலாளா்களுக்கான ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், பணப்பலன் பெறுதல் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், விண்ணப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியத்தை ரூ. 8,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமானம், ஓட்டுநா் நல வாரியம் போல் இதர வாரியங்களுக்கு பணப்பலன்களை உயா்த்தி வழங்க வேண்டும், உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆா். ரசல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, மாவட்டப் பொருளாளா் அப்பாதுரை, சுமைப்பணி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பொன்ராஜ், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் முருகன், கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மாரியப்பன், மருத்துவா் மற்றும் முடிதிருத்தும் சங்க நிா்வாகி நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.