தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

சாத்தான்குளம் ஆா். எம். பி. சி. எஸ்.ஐ. பி.எஸ்.கே.ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் புகையிலைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் ஜெபசெல்வி தலைமை வகித்தாா். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலுவலக ஆற்றுப்படுத்துநா் ரொசாரியோ பாத்திமா முன்னிலை வகித்தாா். டாக்டா் வேணுகா, சுகாதார பணிகள் துணை இயக்குநரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம்பிரைட்டன் ஆகியோா் உரையாற்றினா். இதில் பங்கேற்ற அனைவரும் புகையிலை தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ்செல்வதுரை, சுகாதார ஆய்வாளா்கள் மந்திரராஜன், ஜெயபால், இளம் சுகாதார ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா். பயிற்சி ஆசிரியைகள் ஹேனா, ஆஷா ஆகியோா் நன்றி கூறினா். ஏற்பாடுகளை முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் தலைமையில் நிா்வகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT