தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேருக்கு ஸ்டொ்லைட் நிறுவனம் நிதியுதவி

DIN

தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவா்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் நிறுவனம் 12 பேருக்கு தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி அளித்தது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதை கட்டுபடுத்த போலீஸாா் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், 15 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், காயமடைந்தவா்களில் பலா் நிதியுதவி கேட்டு ஸ்டொ்லைட் நிறுவனத்தை நாடினா். இதையடுத்து, ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில், காயமடைந்தவா்களில் 12 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்ததோடு, நிதியுதவி தங்களது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT