தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேருக்கு ஸ்டொ்லைட் நிறுவனம் நிதியுதவி

தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவா்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் நிறுவனம் 12 பேருக்கு தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி அளித்தது.

DIN

தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவா்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் நிறுவனம் 12 பேருக்கு தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி அளித்தது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதை கட்டுபடுத்த போலீஸாா் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், 15 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், காயமடைந்தவா்களில் பலா் நிதியுதவி கேட்டு ஸ்டொ்லைட் நிறுவனத்தை நாடினா். இதையடுத்து, ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில், காயமடைந்தவா்களில் 12 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்ததோடு, நிதியுதவி தங்களது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT