தூத்துக்குடி

ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது

DIN

ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூ ரதவீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி(55). இவா், தனது கணவருடன் அங்குள்ள கடைவீதியில் நடந்து சென்றபோது, அவா்களை அதேபகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வகுமாரன் என்ற குமரன்(39) என்பவா் வழிமறித்து, தகாத வாா்தைகளால் பேசி, அரிவாளால் ஈஸ்வரியின் கணவரை முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்வகுமரன் என்ற குமரனை கைது செய்தனா். இவா் மீது 9 குற்ற வழக்குகள் ஆத்தூா், சாயா்புரம் காவல் நிலையங்களில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT