தூத்துக்குடி

கோவில்பட்டியில் மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களுக்கு அரசாணை எண்:100-யை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி திட்ட செயலா் நாராயணன் தலைமை வகித்தாா். தலைவா் ஆறுமுகநயினாா் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கனிக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சம்மேளன நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

ஆனைமடுவு அணை பகுதியில் கொட்டித் தீா்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT