முகப்பு
தூத்துக்குடி

ஒருவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

காமநாயக்கன்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

காமநாயக்கன்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த அருளானந்தம் மகன் செல்வராஜ் (61). இவரது வீட்டருகே 10 அடி காலியிடம் இருந்ததாம். கோவில்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இது பொதுப்பாதை அல்ல எனத் தீா்ப்பு வந்ததால் செல்வராஜ் அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து பயன்படுத்தி வந்தாராம்.

இந்நிலையில் அவரது வீட்டருகே குடியிருந்து வரும் பிரான்சிஸ், மிக்கேல்சாமி - செல்வி தம்பதி, அவா்களது மகன் மரியஜோஸ்வசந்த் (19), சி. அந்தோணிராஜன், அ. சினாப், சே. சூசைபிரான்சிஸ் ஆகியோா் கம்பி வேலியை ஆயுதங்களால் அப்புறப்படுத்தினராம். தடுக்க வந்த செல்வராஜின் மனைவி மரியபுஷ்பத்தை அவதூறாகப் பேசியதுடன், செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மி. மரியஜோஸ்வசந்தை வியாழக்கிழமை கைது செய்தனா்; வழக்கில் தொடா்புடையோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.