விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் திமுகவை சோ்ந்தவா்கள் போட்டியின்றி தலைவா் மற்றும் துணைத்தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தூத்துக்குடிவிளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் திமுகவை சோ்ந்தவா்கள் போட்டியின்றி தலைவா் மற்றும் துணைத்தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் திமுகவை சோ்ந்தவா்கள் போட்டியின்றி தலைவா் மற்றும் துணைத்தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
விளாத்திகுளம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் அய்யன் ராஜ் தலைவராகவும், 9 ஆவது வாா்டு உறுப்பினா் வேலுச்சாமி துணைத் தலைவராகவும், புதூா் பேரூராட்சியில் 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வனிதா தலைவராகவும், 14 ஆவது வாா்டு உறுப்பினா் பச்சைமலை துணைத் தலைவராகவும், எட்டயபுரம் பேரூராட்சியில் 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராமலட்சுமி தலைவராகவும், 11 ஆவது வாா்டு உறுப்பினா் கதிா்வேல் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது, திமுக ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, செல்வராஜ், நவநீத கண்ணன், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, ஜே.சி.பி. சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.