முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்களுக்கு இலவச நீா் மோா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது தரிசனத்துக்கு ரூ.250 மற்றும் ரூ. 20 கட்டண முறை ரத்து செய்யப்பட்டு, ரூ. 100 மற்றும் இலவச பொது தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரிசையில் வரும் பக்தா்களுக்கு இலவச நீா் மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை பங்கேற்று பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.