தூத்துக்குடி

கயத்தாறில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட 2 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

DIN

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட 2 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட நொச்சிகுளம், ஆத்திகுளம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கல்வெட்டை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரியா குருராஜ், அதிமுக ஒன்றியச் செயலா் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், முன்னாள் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT