முகப்பு
தூத்துக்குடி

கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் தூய்மைப் பணி

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கடல் ஊராட்சி சாா்பில் கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் முழு தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கடல் ஊராட்சி சாா்பில் கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் முழு தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பனைக்குளம் அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டிக்கு மூடி அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், ஊராட்சிச் செயலா் முருகேசன், தன்னாா்வலா் ஜெயராஜ் உள்ளிட்ட அங்கன்வாடிப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மட்டும் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →