முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நுண்கலை விழா

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். நுண்கலை மன்ற பொறுப்பாளரும், வணிகவியல் துறைப் பேராசிரியையுமான மா. சொா்ணபிரியா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் ஆா். எம். பி., சி. எஸ்.ஐ., பி.எஸ்.கே. ராஜரத்திரம் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெ. ஜெபசெல்வி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பின்னா் நுண்கலை மன்றம் சாா்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி நடந்தது. அதில் இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி வி. அனுஷியா ‘மிஸ் காலேஜ் 2022’ ஆக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொழில் நிா்வாகவியல் துறைப் பேராசிரியை மு. சண்முக சுந்தரி வரவேற்றாா். ஆங்கிலத் துறைப் பேராசிரியை ச. அன்சா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →