ஆசீா்வாதபுரம் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்
ஆசீா்வாதபுரம் பள்ளியில் 12 வயது முதல் 14 வயதுள்ள மாணவா், மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆசீா்வாதபுரம் பள்ளியில் 12 வயது முதல் 14 வயதுள்ள மாணவா், மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆழ்வாா்திருநகரி மருத்துவ அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள், இடைநிலை சுகாதார செவிலியா் மொ்சி, சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா் ஆகியோா் மாணவா்களை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தினா். இதில் முதற்கட்டமாக 40 மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில், தலைமை ஆசிரியா் மாணிக்கம், உதவித் தலைமை ஆசிரியா் சோப்பாா், உடற்கல்வி ஆசிரியா் சாமுவேல் பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.