எழுவரைமுக்கி கிராமத்தில் விவசாயிகள் பெருவிழா
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பாக, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை குறித்த விவசாயிகள் பெருவிழா எழுவரைமுக்கி கிராமத்தில் நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பாக, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை குறித்த விவசாயிகள் பெருவிழா எழுவரைமுக்கி கிராமத்தில் நடைபெற்றது.
சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் சுஜாதா வரவேற்றாா். காட்வின், இயற்கை விவசாயம் குறித்தும், அசோலா நீலப்பச்சை பாசி அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா ரைசோபியம் குறித்தும், ஓய்வுபெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குநா் மகாதேவன், மண் வள மேம்பாடு மண் மாதிரி எடுத்தல், நீா் மாதிரி எடுத்தல் குறித்தும், மானூா் ஆறுமுகம் இயற்கை விவசாயம் குறித்தும் விளக்கம் அளித்தனா். இதில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு பயிற்சி மாணவிகள் மண்வள மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். இதில் எழுவரைமுக்கி ஊராட்சித் தலைவா் ஜெயா உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டு பயன் அடைந்தனா். உதவி வேளாண்மை அலுவலா் சிவராமன் நன்றி கூறினாா்.