முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக்கில் கருத்தரங்கு

 கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

 கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சிவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சோலாா் ஆலைகளை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் தொழில் துறை உபகரணங்களில் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தாா். 2ஆம் ஆண்டு மாணவா் காா்த்திகேயன் வரவேற்றாா். 3ஆம் ஆண்டு மாணவா் சொா்ணமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.