தூத்துக்குடி

உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

DIN

களக்காடு நகராட்சிப் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளின் தரம் குறித்து மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் சசிதீபா தலைமையில் களக்காடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். சங்கரநாராயணன், ஏ. முத்துராஜா, எஸ். ராமகிருஷ்ணன், ஜி. செல்லப்பாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அதில், மீண்டும் பயன்படுத்த வைத்திருந்த 5 லிட்டா் சமையல் எண்ணெய் உள்பட விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட பல உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், உணவு வணிகா்கள் இம்மாதம் இறுதிக்குள் உணவு வணிக உரிமம் பெற வேண்டும்; ஆய்வுகள் தொடரும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT