மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
கோவில்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
கோவில்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
கோவில்பட்டியை அடுத்த அய்யனேரி யாதவா் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி கிருஷ்ணம்மாள்(66). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் அவரை வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து காணவில்லையாம். குடும்பத்தினா் அவரை தேடி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கிணற்றில் அவா் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.