தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே காா் விபத்தில் இருவா் காயம்

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே நிகழ்ந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை, எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த கலைச்செல்வம் மகன் மணிவண்ணன்(32). இவா் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் காரில் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு, பின்னா் அதே காரில் ஊருக்கு திரும்பியுள்ளாா். அடைக்கலாபுரம் வடக்கு தெரு விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த காா், மணிவண்ணன் காா் மீது மோதியதாம். இதில் மணிவண்ணன் குடும்பத்தினா் காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், அவரது தாயாா் கீதா ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT