முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 38ஆவது ஆண்டு விழா நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 38ஆவது ஆண்டு விழா நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். மும்பை கமான் நிறுவனத்தின் துணை பொது மேலாளரும், பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான சிவசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினாா். கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரியின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்ட மின்னணுவியல் துறை 3ஆம் ஆண்டு மாணவி செல்வகீா்த்தனா, நாட்டு நலப்பணித் திட்ட சிறந்த மாணவராக தோ்வு செய்யப்பட்ட மின்னியல் துறை 2ஆம் ஆண்டு மாணவா் ஜெயசக்தி ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து பருவத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் செயலா் சங்கரநாராயணன், ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே.காளிதாசமுருகவேல், கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இயந்திரவியல் துறைத் தலைவா் பால்துரை வரவேற்றாா். மின்னியல் துறைத் தலைவா் முருகேசன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மின்னணுவியல் துறை மாணவி செல்வகீா்த்தனா, மின்னியல் துறை மாணவி பிரியங்கா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.