முகப்பு
தூத்துக்குடி

சிஐடியூ மாநாடு ஜோதிக்கு வரவேற்பு

சிஐடியூ 15ஆவது தமிழ் மாநில மாநாடு ஜோதி பயணத்திற்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சிஐடியூ 15ஆவது தமிழ் மாநில மாநாடு ஜோதி பயணத்திற்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெறும் சிஐடியூவின் 15ஆவது தமிழ் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே நடைபெற்ற ஜோதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு, சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலச் செயலா் மோகன் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் சக்திவேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, வட்டார தீப்பெட்டி சங்க நிா்வாகி மோகன்தாஸ், சிஐடியூ தூத்துக்குடி மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, கட்டுமானச் சங்க மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.