முகப்பு
தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

புதுக்கோட்டை அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவிமலா (42). இவா்கள் பைக்கில் திருநெல்வேலி-தூத்துக்குடி சாலையில் புதன்கிழமை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனராம்.

வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த கணேசனும், விமலாவும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு விமலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.