தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே திருட்டு வழக்கில் 4 போ் கைது; 76 சவரன் நகைகள் மீட்பு

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீசாா் கைது செய்து அவா்களிடமிருந்து 76 சவரன் நகைகளை மீட்டனா்.

DIN

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீசாா் கைது செய்து அவா்களிடமிருந்து 76 சவரன் நகைகளை மீட்டனா்.

விளாத்திகுளம் அருகே சல்லிசெட்டிபட்டி கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி செல்லப்பாண்டியன் மனைவி ராதா (39) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ராதா அளித்த புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரனையில், நகைகளை திருடிச் சென்ற சம்பவத்தில் தொடா்புடைய சல்லிசெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த தமிழ்முருகன் மகன் மணிகண்டன் (26), குணசேகரன் மகன் வசந்தகுமாா் (23), புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த அம்புரோஸ் மகன் ராஜா (எ) பாலாஜி (36) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 13 சவரன் நகைகளை மீட்டனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிரபாகரன் (23) என்பவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் ஆய்வாளா் அனிதா, காவலா்கள் பரசுராமன், சின்னத்துரை ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் துப்பு துலக்கி, சென்னை வேளச்சேரியில் பதுங்கியிருந்த முருகன் மகன் பிரபாகரன் (23) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான 63 சவரன் நகைகளை போலீசாா் மீட்டனா். இவ்வழக்கில் மொத்தம் 76 சவரன்நகைகளை போலீசாா் மீட்டு 4 பேரை கைது செய்துள்ளனா். சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT