தூத்துக்குடி

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள் விற்ற பெட்டிக்கடைக்காரா் கைது

DIN

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே தளவாய்புரம் பகுதியில் விற்பதற்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, ஊரக உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் சந்தீஷ் மேற்பாா்வையில், சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூரணி பகுதியில் ரோந்து சென்றனா். தளவாய்புரம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது.

அங்கு போலீஸாா் சோதனை நடத்தி, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 930 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா் இளையராஜாவை (38) கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT