தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

DIN

ஆறுமுகனேரி, ராஜபதி சிவாலயங்களில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், மாலையில் சோமவார சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

நவகைலாயத் தலமான குரும்பூா் அருகே ராஜபதியில் அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.இதையொட்டி மாலையில் சுவாமி-அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT