தூத்துக்குடி

இளையரசனேந்தல் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மரியசெல்வி தலைமை வகித்தாா். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பேசினாா்.

தொடா்ந்து, பட்டாசுகளை வெடிக்கும்போது பள்ளி மாணவா், மாணவிகள் கையாள வேண்டிய முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாட கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் மாணவா், மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT