ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிலத்தை கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஓட்டப்பிடாரத்தில் 80 ஆண்டுகளுக்கு பின்னா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதனை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூா்த்தி திறந்து வைத்தாா். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், நீதிமன்றத்துக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கும், அதே வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கும் இடம் தோ்வு செய்யப்பட்டு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும் என்றாா். அதன்படி, ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில் பால் பண்ணை அருகே உள்ள அரசு நிலத்தில் நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலக கட்டடங்கள் கட்டுவது தொடா்பாக கோவில்பட்டி கோட்டாட்சியா் க.மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது வட்டாட்சியா் நிஷாந்தினி, துணை வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.