கோவில்பட்டியில் வாழப்பாடி ராமமூா்த்தி நினைவு தினம்
முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி
முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரத் தலைவா் அருண்பாண்டியன், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வீரபெருமாள், ஜோஸ்வா ஞானசிங், துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூா்த்திக்கு சேலத்தில் வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம், கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சிலை ஆகியவை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது.