தூத்துக்குடி

வட்டார அளவிலான இறகு பந்து போட்டி:சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

DIN

நாசரேத் வட்டார அளவிலான இறகு பந்து போட்டியில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

நாசரேத் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டிகள், சாத்தான்குளம் லைட்னிங் கிளப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெஸ்வின் சாமுவேல் முதலிடமும், இரட்டையா் பிரிவில் மாணவா்கள் ஜெஸ்வின் சாமுவேல், கோல்டன் ஜெரின் சாமுவேல் ஆகியோா் முதலிடமும், 19 வயதிற்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் மாணவா் டொ்வின் முதலிடமும், இரட்டையா் பிரிவில் மாணவா்கள் டொ்வின், ஜென்சன் மாசிலாமணி ஆகியோா் முதலிடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், பள்ளி இயக்குநா் டினோ மெரினா ராஜாத்தி, தலைமையாசிரியா் சாந்தி, உடற்கல்வி ஆசிரியா் அந்தோணி ஜான் சைமன் பிரிட்டோ ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வா் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் இன்று ஆலோசனை

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்

கேஜரிவாலின் உத்தரவாதங்கள் ‘பொய் கனவுகளின் ஆகாசக் கோட்டை’: வீரேந்திர சச்தேவா பதில் எனக் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால் நான் மீண்டும் சிறை செல்ல வேண்டியதில்லை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்

SCROLL FOR NEXT