எழுத்தாளா் கி.ரா. பயின்ற பள்ளி புதுப்பிப்பு:காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
இடைசெவலில் புதுப்பிக்கப்பட்ட, எழுத்தாளா் கி.ரா. பயின்ற பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இடைசெவலில் புதுப்பிக்கப்பட்ட, எழுத்தாளா் கி.ரா. பயின்ற பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா, கோவில்பட்டியையடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தவா். அவரது மறைவை தொடா்ந்து, அவா் பயின்ற பள்ளியை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரூ.25 லட்சம் செலவில் பழைமை மாறாமல் அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.
இப்பணிகள் முடிவுற்றநிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பள்ளியை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
Advertisement
இதையொட்டி, இடைசெவலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (ஊரக வளா்ச்சி) சரவணன் கல்வெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னராசு, இடைசெவல் ஊராட்சி மன்றத் தலைவா் ரெங்கநாயகி, எழுத்தாளா் கி.ரா. மகன் பிரபாகரன், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.