சிந்தலக்கரையில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி: உற்சாகமாக பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்
விவசாயம் செழிக்க வேண்டி, சிந்தலக்கரை கிராமத்தில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினா்.
விவசாயம் செழிக்க வேண்டி, சிந்தலக்கரை கிராமத்தில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினா்.
பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சியையொட்டி, உழவுக்கு பயன்படுத்தப்படும் காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, வெற்றிலை காப்பு, மாலை அணிவித்தனா். பின்னா், டிராக்டா்கள், ஏா் கலப்பைகள் மற்றும் விவசாய கருவிகளை சுத்தப்படுத்தி மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, வீடுகளில் உள்ள பயறு மற்றும் சிறு தானிய விதைகளை ஓலைக் கொட்டானில் வைத்து விநாயகா் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு சிந்தலக்கரை கிராம கமிட்டி தலைவா் சுப்பையா, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலையில் கிராமத்தின் கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் ஒன்றுகூடி சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் மற்றும் டிராக்டா்கள் மூலம் உழவுப் பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனா். நிறைவாக, கிராம எல்லையில் விவசாயிகளை பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.