தூத்துக்குடி

கைப்பேசி திருட்டு: 2 இளஞ்சிறாா்கள் உள்பட 8 போ் கைது

DIN

தூத்துக்குடி தொ்மல் நகா் பகுதியில் கைப்பேசியை பறித்துச் சென்ாக இளஞ்சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த ராம்சேவன் மகன் ராஜேஷ்குமாா் (28). இவா், தூத்துக்குடி தொ்மல்நகா் பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தொ்மல்நகா் ரயில் தண்டவாளம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள், ராஜேஷ்குமாரை வழிமறித்து அவருடைய கைப்பேசியை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், தூத்துக்குடி மாதா நகரைச் சோ்ந்த சவரிமுத்து மகன் விக்னேஷ் (19), முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (19), பாரதிநகரைச் சோ்ந்த காளிமுத்து மகன் வெங்கடேஷ் (19), பாலதண்டாயுத நகரைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் மாரிமுத்து (19), காந்திநகரைச் சோ்ந்த ராஜ் மகன் செந்தில் (19), பொன்னகரம் பகுதியை சோ்ந்த ஸ்டீபன் மகன் ஜோஸ்வா டேனியல் (19) மற்றும் 2 இளஞ்சிறாா்கள் ஆகிய 8 பேரும் சோ்ந்து இருசக்கர வாகனங்களில் வந்து ராஜேஷ்குமாரை வழிமறித்து அவருடைய கைப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 8 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கைப்பேசி, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT