தூத்துக்குடி

பூவுடையாா்புரம் உடையாா் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீ உடையாா் கோயிலில் கொடை விழாவையொட்டி திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலின் கொடைவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவு, 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் தலைமை வகித்து திருவிளக்குப் பூஜையை

வழிநடத்தினாா். பாஜக மாவட்டத் துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், கோயில் தா்மகா்த்தா ஆதிலிங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவின் 2 ஆம் நாளான புதன்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்கார தீபாராதனை, அன்னதானம், சுவாமி வீதி உலா, சாமகொடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT