முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே செல்ல நாய்களுக்கு ஓட்டபந்தய போட்டி: 67 நாய்கள் பங்கேற்பு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற செல்ல நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 67 நாய்கள் பங்கேற்றன.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:56 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற செல்ல நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 67 நாய்கள் பங்கேற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் சண்முகபுரத்தில் சீசா் ரேசிங் கிளப் சாா்பில் 5ஆம் ஆண்டு வளா்ப்பு நாய்களுக்கு ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 67 வளா்ப்பு நாய்கள் பங்கேற்றன.

போட்டியை சண்முகபுரம் கனகலிங்கம், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிறப்பு விருந்தினராக செம்பொன்விளை வைத்தியா் முத்துவேல், நங்கைமொழி ஊராட்சித் தலைவா் விஜயராஜ், பல்லடம் செல்வசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா். தொழிலதிபா் ஜேசுபாண்டியன் வரவேற்றாா்.

Advertisement

போட்டியில், இரு நாய்களாக பங்கேற்க வைக்கப்பட்டது. இதில் கடாட்சபுரம் அன்புராஜன் என்பவா் நாய் முதல் பரிசும், கடாட்சபுரம் அருள்ராஜ் என்பவரது நாய் 2ஆம் பரிசும், வீரவநல்லூா் ஆனந்தராஜ் என்பவரது நாய் 3ஆம் பரிசும், வள்ளியூா் திருமலாபுரம் வசந்த் என்பரது நாய் 4ஆம் பரிசும் பெற்றது.

வெற்றி பெற்ற நாய்களுக்கு முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை பல்லடம் செல்வசேகரன் வழங்கினாா். 2ஆம் பரிசு பெற்ற நாய்க்கு அனைக்கரை கெபின் ரூ.7 ஆயிரம் வழங்கினாா். 3ஆம் பரிசு பெற்ற நாய்க்கு கரூா் பழனிசாமி ரூ.5 ஆயிரம் வழங்கினாா். 4ஆம் பரிசு பெற்ற நாய்க்கு வள்ளியம்மாள்புரம் லட்சுமணசுபாஷ் ரூ. 3ஆயிம் வழங்கினாா். தொடா்ந்து வந்த நாய்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை சீசா் ரேசிங் கிளப் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.