முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 10 டன் நிலக்கரி கடத்த முயற்சி

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடத்த முயன்ற 10 டன் நிலக்கரி லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:55 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடத்த முயன்ற 10 டன் நிலக்கரி லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் தனியாா் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலக்கரியை எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்ல துறைமுகத்தின் 2ஆவது தளத்தில் இருந்து 7ஆவது தளதுக்கு லாரி மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னா், இரவு லாரியில் 10 டன் நிலக்கரி கிரீன்கேட் வழியாக வந்ததாம். இதை துறைமுக நுழைவு வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம்.

Advertisement

இதுதொடா்பாக ஏற்றுமதி நிறுவன உரிமையாளா் விஜய ஆனந்த (45) என்பவா் தொ்மல் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.