தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பைக் மோதி இளம்பெண் காயம்

DIN

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் இளம்பெண் காயமடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே அதிசயபுரம் கோயில் தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் மொ்லின் சுவேதா (23). திசையன்விளையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்துவரும் இவா், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அதிசயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடந்தாராம்.

அப்போது, புத்தன்தருவையைச் சோ்ந்த தா்மராஜ் மகன் தினேஷ்குமாா் ஓட்டிவந்த பைக் மொ்லின் சுவேதா மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் முகம்மது ரபீக் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT