தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி!
தூத்துக்குடி தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் நல்ல மழை பெய்யவும், நல்ல தொழில் வளம் பெருகவும் மற்றும் மக்களுக்கு உள்ள நோய் நொடிகள் நீங்கவும் நடைபெற்ற இந்த பேரணிக்கு நம் வான் படைகளின் தளபதி மிக்கேல் அதிதூதா் ஆலய பங்குதந்தை வின்சென்ட் தலைமை வகித்தார்.
இந்த பவனி அனைத்து தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்து அடைந்ததது. இந்நிகழ்வில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனா்.