தூத்துக்குடி

வெம்பூா் அருகே டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து:ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

DIN

மதுரையில் இருந்து பெட்ரோல் டீசல் நிரப்பி வந்த டேங்கா் லாரி வெம்பூா் அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் கப்பலூா் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி டீசல் பங்குக்கு 8 ஆயிரம் லிட்டா் டீசல், 4 ஆயிரம் லிட்டா் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூா் பகுதியை கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் சாத்தூரைச் சோ்ந்த குமாா் (52) என்பவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

டேங்கரில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் வெளியேறி அப்பகுதியில் குளம் போல் தேங்கியது. தகவலறிந்து விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து சென்று தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இதனால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT